Breaking News

13 வயது மகளுடன் சேர்த்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த தாய்


தாய் ஒருவர் தனது 13 வயது மகளுடன் சேர்த்து விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வந்த சம்பவம் ஒன்று லக்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

சம்பவத்தில் தாயும், இள வயது மகளை தேடி வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

13 வயது மகளுடன் சேர்ந்து தாய் ஒருவர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, லக்கல பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சூட்சுமமான முறையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

குறித்த இளவயது மகளை நாவுல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் அனுப்பியிருந்த நிலையில், அந்த நபரும் சிறுமியும் தம்புள்ளை, இப்பன்கட்டுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த போது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவயது சிறுமி ஒருவருக்கு அறை வசதி வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் இளவயது மகளை விபச்சாரத் தொழில் ஈடுபடுத்திய தாய் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments